பேட்மிட்டன் போட்டியில் வென்ற மாணவருக்கு கவர்னர் வாழ்த்து
புதுச்சேரி: எகிப்தில் நடந்த சர்வதேச பாரா பேட்மிட்டன் போட்டியில் வெண்கலம் வென்ற பல்கலைக் கழக மாணவரை கவர்னர் வாழ்த்தினார். சர்வதேச அளவில் 28 நாடுகள் பங்கேற்ற பாரா பேட்மின்டன் போட்டியில், இந்தியாவின் சார்பில் வெண்கல பதக்கம் வென்ற புதுச்சேரி பல்கலைக் கழக மாணவர் வெங்கடசுப்ரமணியன் கவர்னர் கைலாஷ்நாதனை அவரது அலுவலகத்தில் சந்தித்து வாழ்த்து பெற்றார். தேசிய இளைஞர் திட்டத்தின் மாநில செயலர் ஆதவன், பயிற்சியாளர் கணபதி, மாணவரின் தாயார் ஜெயப்பிரதா ஆகியோர் உடனிருந்தனர்.