பட்டதாரி பெண் மாயம்
நெட்டப்பாக்கம், : நெட்டப்பாக்கத்தில் கடைக்கு சென்ற பட்டதாரி பெண் மாயமானது குறித்து போலீசார் விசாரித்து வருகின்றனர். நெட்டப்பாக்கம் அம்பேத்கர் நகரைச் சேர்ந்தவர் நந்தீஸ்வரி ,24; பட்டதாரி. இவர் கடந்த 27 ம் தேதி காலை கரியமாணிக்கம் கடைக்கு சென்று வருவதாக கூறிவிட்டு சென்றவர் இதுவரை வீடு திரும்பவில்லை. இவரை உறவினர்கள் உள்ளிட்ட பல்வேறு இடங்களில் தேடிப்பார்த்தும் கிடைக்கவில்லை.இது குறித்து அவரது தந்தை கலியமூர்த்தி கொடுத்த புகாரின் பேரில் நெட்டப்பாக்கம் போலீசார் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனர்.