மேலும் செய்திகள்
கம்பெனியில் திருட்டு
04-Apr-2025
நெட்டப்பாக்கம் : மே தினத்தை முன்னிட்டு, நெட்டப்பாக்கம் கொம்யூன் பஞ்சாயத்து கிராமங்களில் கிராம சபை கூட்டம் வரும் 1ம் தேதி நடக்கிறது.ஆணையர் ரமேஷ் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு:நெட்டப்பாக்கம் கொம்யூன் பஞ்சாயதிற்குட்பட்ட 11 கிராம பஞ்சாயத்துகளில் மே தினத்தை முன்னிட்டு, வரும் 1ம் தேதி காலை 10:00 மணிக்கு கிராம சபை கூட்டம் நடக்கிறது.அதன்படி, மடுகரை கிழக்கு மரக்காளீஸ்வரர் கோவில் வளாகம், மடுகரை தெற்கு அரசு பெண்கள் மேல்நிலைப் பள்ளி, சூரமங்கலம் கலையரங்கம், கரியமாணிக்கம் விவசாய பண்ணை அலுவலக வளாகம், ஏரிப்பாக்கம் அரசு தொடக்கப் பள்ளி, கல்மண்டபம் - பண்டசோழநல்லுார் சமுதாயக்கூடம், நெட்டப்பாக்கம் சிவன் கோவில் வளாகம், ஏம்பலம் அரசு மேல்நிலைப் பள்ளி வளாகம், செம்பியப்பாளையம் நத்தமேடு அய்யனார் கோவில் வளாகம், கரிக்கலாம்பாக்கம் ராஜிவ்காந்தி திருமண மண்டபம், கோர்காடு அரசு தொடக்கப் பள்ளி வளாகம் உள்ளிட்ட இடங்களில் கிராம சபை கூட்டம் நடக்கிறது.இதில், பொதுமக்கள் பங்கேற்று தேவையான அடிப்படை வசதிகள், கிராம வளர்ச்சிக்கான ஆலோசனைகளை, கூட்டத்தில் தெரிவிக்கலாம். அதற்கான பணிகள் நிறைவேற்ற நடவடிக்கை மேற்கொள்ளப்படும்.
04-Apr-2025