உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / புதுச்சேரி / இ.எஸ்.ஐ, அலுவலகத்தில் நாளை குறைதீர்வு முகாம்

இ.எஸ்.ஐ, அலுவலகத்தில் நாளை குறைதீர்வு முகாம்

புதுச்சேரி: தொழிலாளர் அரசு காப்பீட்டுக் கழக மண்டல அலுவலத்தில், நாளை குறை தீர்வு முகாம் நடக்கிறது.இதுகுறித்து, புதுச்சேரி தொழிலாளர் அரசு காப்பீட்டுக் கழக மண்டல இயக்குனர் அலுவலக செய்திக்குறிப்பு:புதுச்சேரி, தொழிலாளர் அரசு காப்பீட்டுக்கழக மண்டல அலுவலகத்தில், ஒவ்வொரு மாதம் 2வது புதன் கிழமை குறை தீர்வு முகாம் நடந்து வருகிறது. அதன்படி, நாளை 8ம் தேதி, மதியம் 3:30 மணி முதல் 4:30 மணி வரை முகாம் நடக்கிறது.எனவே, தொழிலாளர்கள், பயனாளிகள், தொழில் முனைவோர்கள், இ.எஸ்.ஐ., தொடர்பான கோரிக்கைகளை கடிதங்கள் மூலம் தெரிவிக்கலாம். இவ்வாறு செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !