உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / புதுச்சேரி / நலத்திட்ட உதவிக்கான ஆணை வழங்கல் 

நலத்திட்ட உதவிக்கான ஆணை வழங்கல் 

அரியாங்குப்பம் : தவளக்குப்பத்தில், முதியோர் உதவித்தொகை உள்ளிட்ட பெண்களுக்கான நலத்திட்ட உதவிக்கான, ஆணையை, சபாநாயகர் செல்வம், பயனாளிகளுக்கு வழங்கினார். மகளிர் மற்றும் குழந்தைகள் மேம்பாட்டுத்துறை மூலம், முதியோர் உதவித்தொகை, விதவை பெண்கள், கணவரால் கைவிடப்பட்டவர்களுக்கு, மாதாந்திர நிதியுதவிக்கான அரசாணை வழங்கும் நிகழ்ச்சி தவளக்குப்பம் தனியார் திருமண மண்டபத்தில் நேற்று நடந்தது. இந்த திட்டத்தில், மணவெளியை தொகுதியை சேர்ந்த, 300 பயனாளிகளுக்கு நிதியுதவிக்கான ஆணையை, சபாநாயகர் செல்வம், பயனாளிகளுக்கு வழங்கி பேசினார். நிகழ்ச்சியில், மகளிர் மற்றும் குழந்தைகள் மேம்பாட்டுத்துறை இயக்குனர் முத்துமீனா, இணை இயக்கனர் பாலமுருகன், பா.ஜ., பிரமுகர்கள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை