ஜிப்மரில் நாளை புற நோயாளிகள் பிரிவு இயங்காது
புதுச்சேரி: புதுச்சேரி ஜிப்மர் மருத்துவமனையில் நாளை( 4ம் தேதி) புற நோயாளிகள் பிரிவு இயங்காது என அறிவிக்கப்பட்டுள்ளது. நாளை (4ம் தேதி) ேஹாலி பண்டிகையை, மத்திய அரசு விடுமுறை தினமாக அறிவித்துள்ளது. அதனால், நாளை ஜிப்மர் மருத்துவமனையில் புறநோயாளிகள் பிரிவு இயங்காது. அதனால், வெளியூர்களில் இருந்து வரும் புறநோய் சிகிச்சை பிரிவுக்கு வருவதை தவிர்க்கவும். எனினும், அவசர பிரிவு சேவைகள் அனைத்தும் இயங்கும். இத்தகவலை ஜிப்மர் நிர்வாகம் தெரிவித்துள்ளது.