வேலை வாய்ப்பு முகாம்: 183 பேருக்கு பணி ஆணை
புதுச்சேரி: புதுச்சேரி ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடி இனத்தவர்களுக்கான தேசிய வாழ்வாதார சேவை மையம் சார்பில் வேலை வாய்ப்பு முகாம் நேற்று நடந்தது. ரெட்டியார்பாளையம், நடேசன் நகரில் உள்ள அலுவலகத்தில் நடந்த முகாமிற்கு, துணை மண்டல வேலைவாய்ப்பு அதிகாரி ரபீந்திரநாத் மோண்டல் தலைமை தாங்கி துவக்கி வைத்தார். இதில், புதுச்சேரியை சேர்ந்த 3 தனியார் முன்னணி நிறுவனங்கள் பங்கேற்று, ஊழியர்களை தேர்வு செய்தன. முகாமில், புதுச்சேரியை சேர்ந்த படித்த இளைஞர்கள் 393 பேர் கல்வி தகுதி சான்றிதழ்களுடன் கலந்து கொண்டனர். வேலை வாய்ப்பு முகாமில் 183 பேர் தேர்வு செய்யப்பட்டு, பணி ஆணை வழங்கப்பட்டது.