மேலும் செய்திகள்
பொன்முடி குவாரி வழக்கு விசாரணை ஒத்திவைப்பு
18-Jul-2025
கள்ளக்குறிச்சி : கனியாமூர் பள்ளி கலவர வழக்கு விசாரணை, நவ., 11ம் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டது. கள்ளக்குறிச்சி மாவட்டம், சின்னசேலம் அடுத்த கனியாமூர் சக்தி மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி விடுதியில் தங்கி பிளஸ் 2 படித்த மாணவி ஸ்ரீமதி, 2022ம் ஆண்டு ஜூலை 13ம் தேதி மர்மமான முறையில் இறந்தார். மாணவி இறப்புக்கு நியாயம் கேட்டு, ஜூலை 17ம் தேதி நடந்த போராட்டம், கலவரமாக மாறியது. கலவர வழக்கை விசாரித்த சிறப்பு புலனாய்வு குழு போலீசார், பள்ளி வளாகத்திற்குள் இருந்த பொருட்களை சூறையாடி திருடியது, போலீஸ் வாகனத்திற்கு தீ வைத்தது, பசுமாடுகளை துன்புறுத்தியது, போலீசார் மீது கல்வீசி தாக்கியது என, 4 வழக்குகள் பதிவு செய்தனர். 916 பேர் மீது வழக்கு பதிந்து, 500க்கும் மேற்பட்டோரை கைது செய்தனர். இதில், பள்ளியில் கலவரத்தில் ஈடுபட்டு, போலீஸ் வாகனங்களுக்கு தீ வைத்தது தொடர்பான வழக்கில் 121 பேர் மீது வழக்கு பதிவு செய்தனர். இதில், ஒருவர் இறந்து விட்டார். இவ்வழக்கு விசாரணை கள்ளக்குறிச்சி குற்றவியல் நீதித்துறை நடுவர் நீதிமன்றத்தில் நேற்று நடந்தது. 2 பெண்கள் உட்பட 81பேர் விசாரணைக்கு ஆஜராகினர். 39 பேர் ஆஜராகவில்லை. வழக்கை விசாரித்த நீதிபதி ரீனா, விசாரணையை நவ., 11ம் தேதிக்கு ஒத்தி வைத்து உத்தரவிட்டார்.
18-Jul-2025