உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / புதுச்சேரி / பொன்னியம்மன் கோவிலில் 2ம் தேதி கும்பாபிஷேகம்

பொன்னியம்மன் கோவிலில் 2ம் தேதி கும்பாபிஷேகம்

புதுச்சேரி: பாக்கமுடையான்பட்டு பொன்னியம்மன் கோவிலில் கும்பாபிஷேகம் நேற்று கணபதி ஹோமத்துடன் துவங்கியது. புதுச்சேரி, பாக்கமுடையான்பட்டு, ஏர்போர்ட் சாலையில் பொன்னியம்மன், செல்வ விநாயகர் கோவில் அமைந்துள்ளது. இக்கோவில் புனரமைக்கப்பட்டும், புதிதாக 5 நிலை கொண்ட ராஜகோபுரம் அமைக்கப்பட்டு மகா கும்பாபிஷேகம் வரும் 2ம் தேதி நடக்கிறது. இதையொட்டி, நேற்று (27 ம் தேதி) காலை 9:30 மணிக்கு கணபதி ஹோமம், அபிேஷக தீபாராதனை நடந்தது. நாளை(29ம் தேதி) காலை 9:00 மணிக்கு அனுக்ஞை விக்னேஸ்வர பூஜை, மகா கணபதி ஹோமம், பூர்ணாஹீதி, தீபாராதனை, மாலை 4:00 மணிக்கு புதிய விக்ரகங்கள், கோபுர கலசங்கள் கரிக்கோலம், மாலை 6:00 மணிக்கு வாஸ்து சாந்தி நடக்கிறது. 30ம் தேதி நவக்கிரஹ ஹோமம், மூர்த்தி ஹோமம், திசா ஹோமம், பூர்ணாஹீதி, 31ம் தேதி மாலை 6:00 மணிக்கு முதல்கால யாகசாலை பிரவேசம், யாக பூஜை ஆரம்பம் நடக்கிறது. வரும் 1ம் தேதி காலை 8:30 மணிக்கு இரண்டாம் கால யாக பூஜை ஆரம்பம், மாலை 6:00 மணிக்கு மூன்றாம் கால யாக பூஜை நடக்கிறது.முக்கிய நிகழ்வாக, வரும் 2ம் தேதி காலை 8:00 மணிக்கு நான்காம் கால யாகபூஜை ஆரம்பம், காலை 10:00 மணிக்கு யாத்ராதானம், கடம் புறப்பாடு, காலை 10:20 மணிக்கு விமான, ராஜகோபுரம் மகா கும்பாபிஷேகம், 11:00 மணிக்கு மூலவர் மகா கும்பாபிஷேகம் நடக்கிறது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை