லோன் ஆப் மூலம் கடன் ரூ.2.13 லட்சம் மோசடி
புதுச்சேரி: புதுச்சேரியில் லோன் ஆப் மூலம் கடன் பெற்றவர்களிடம் ரூ.2.13 லட்சம் மோசடி செய்த கும்பல் குறித்து சைபர் கிரைம் போலீசார் விசாரித்து வருகின்றனர். முத்தரையர்பாளையம் பகுதியை சேர்ந்த நபர், லோன் ஆப் மூலம் கடன் வாங்கியுள்ளார். அந்த கடனை குறிப்பட்ட காலக் கெடுவுக்குள் அவர் திரும்ப செலுத்தியுள்ளார். ஆனால் கூடுதல் தொகையை கேட்டும், மார்பிங் போட்டோ அனுப்பியும் மிரட்டி ரூ.2.8 லட்சத்தை அபகரித்துள்ளனர். இதேபோல், லாஸ்பேட்டை பகுதியை சேர்ந்த நபர் லோன் ஆப் மூலம் ரூ. 7 ஆயிரம் பெற்றுள்ளார். ஆனால் அவர் கடனை குறித்த காலத்தில் திரும்ப செலுத்திய பிறகும், அவருக்கு மார்பிங் போட்டோ அனுப்பி மிரட்டி ரூ. 15 ஆயிரத்தை அபேஸ் செய்துள்ளனர். லிங்காரெட்டிபாளையம் நபரையும் இதுபோல் மிரட்டி ரூ.62 ஆயிரத்தை மோசடி செய்துள்ளனர். லாஸ்பேட்டையை சேர்ந்த பெண், இன்ஸ்டாகிராமில் வந்த விளம்பரத்தை பார்த்து ரூ.734க்கு பொருட்கள் ஆர்டர் செய்துள்ளார். பொருட்களை பெறும் போது, முகவரி அப்டேட் எனக்கூறி ரூ.5 ஆயிரத்தை பறித்துள்ளார். புகாரின் பேரில் சைபர் கிரைம் போலீசார் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின் றனர்.