மேலும் செய்திகள்
முன்விரோத தகராறு 2 பேர் மீது வழக்கு
27-Oct-2024
புதுச்சேரி, : சைக்கிள் திருட வந்த நபரை தாக்கியவரை போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர்.விழுப்புரம் மாவட்டம் வானுார் பகுதியைச் சேர்ந்தவர் குமார் 40, இவர் கடந்த மாதம் 14ம் தேதி இரவு புதுச்சேரி சஞ்சீவ் நகரில் சைக்கிள் திருட சென்றபோது, அப்பகுதியைச் சேர்ந்த முருகன் 42, என்பவர் பார்த்துள்ளார். பின்னர் இருவருக்கும் இடையே தகராறு ஏற்பட்டு அப்போது முருகன் தாக்கியதில் குமார் கை முறிந்தது. இதையடுத்து குமார் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்ற பின் கோரிமேடு போலீசில் புகார் கொடுத்தார்.அதன்பேரில் போலீசார் வழக்குப் பதிந்து முருகனை கைது செய்து சிறையில் அடைத்தனர். குமார் மீது வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனர்.
27-Oct-2024