ஆபாசமாக பேசியவர் கைது
காரைக்கால்: காரைக்காலில் மது அருந்தி விட்டு பொதுமக்களிடம் ஆபாசமாக பேசி நபரை போலீசார் கைது செய்தனர். காரைக்கால், பாரதியார் சாலையில் நேற்று முன்தினம் நகர போலீசார் ரோந்து பணியில் ஈடுபட்டனர். அப்போது புதிய பஸ் நிலையம் அருகில் மது அருந்திவிட்டு பொதுமக்களுக்கு இடையூறாக ஆபாசமாக பேசிய நபரை போலீசார் மடக்கி பிடித்து விசாரித்தனர். அவர், மயிலாடுதுறை மாவட்டம், தரங்கம்பாடி ஆக்கூர் பகுதியை சேர்ந்த ரவி மகன் கணேஷ் குமார், 22, என்பது தெரி வந்தது. அவர், மீது நகர போலீசார் வழக்குப் பதிந்து கைது செய்தனர்.