மன் கீ பாத் நிகழ்ச்சி 24ம் தேதி ஒலிபரப்பு
புதுச்சேரி : நாட்டுமக்களுக்கு பிரதமர் உரையாடும் மனதின் குரல் நிகழ்ச்சி, அகில இந்திய வானொலியில் வரும் 24ம் தேதி ஒலிபரப்ப படுகிறது.பிரதமர் மோடி நாட்டுமக்களுக்கு உரையாடும் மனதின் குரல் நிகழ்ச்சி, வரும் 24ம் தேதி, காலை 11:00 மணிக்கு அகில இந்திய வானொலி மற்றும் ரெயின்போ பண்பலை 102.8 மெகா ஹெர்ட்ஸ் அலை வரிசைகளில் ஒலிப்பரப்ப படுகிறது. அதனை தொடர்ந்து தமிழில், அன்று இரவு 8:00 மணிக்கு மறு ஒலிபரப்ப படுகிறது.என புதுச்சேரி, அகில இந்திய வானொலி நிகழ்ச்சி பிரிவு தலைவர் செந்தில்குமார் தெரிவித்துள்ளார்.