மே தின ஊர்வலம்
புதுச்சேரி: புதுச்சேரி ஏ.ஐ.டி.யூ.சி., மற்றும் சி.ஐ.டி.யூ., சார்பில் 140 வது மே தின ஊர்வலம் நேற்று நடந்தது. ஊர்வலம் புதுச்சேரி பாலாஜி தியேட்டர் அருகில் துவங்கி மறைமலையடிகள் சாலை வழியாக சென்று சுதேசி காட்டன் மில் அருகில் முடிவடைந்தது. தொடர்ந்து நடந்த பொதுகூட்டத்திற்கு, ஏ.ஐ.டி.யூ.சி., மாநில தலைவர் தினேஷ் பொன்னையா, சி.ஐ.டி.யூ., மாநில துணை தலைவர் முருகன் ஆகியோர் தலைமை தாங்கினர். ஏ.ஐ.டி.யூ.சி., மாநில பொது செயலாளர் அந்தோணி, சி.ஐ.டி.யூ., மாநில பொது செயலாளர் சீனுவாசன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். சி றப்பு அழைப்பளராக இ.கம்யூ., மாநில செயலாளர் சலீம், மா.கம்யூ., அரசியல் தலைமைக்குழு உறுப்பினர் பாலகிருஷ்ணன் ஆகியோர் பங்கேற்று பேசினர். கூட்டத்தில் ஏ.ஐ.டி.யூ.சி., சி.ஐ.டி.யூ., நிர்வாகிகள், தொழிலாளர்கள் பலர் கலந்து கொண்டனர்.