உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / புதுச்சேரி / புற்றுமாரியம்மன் கோவிலில் பால்குடம் ஊர்வலம்

புற்றுமாரியம்மன் கோவிலில் பால்குடம் ஊர்வலம்

புதுச்சேரி : புற்றுமாரியம்மன் கோவிலில், 4ம் ஆண்டு விழாவையொட்டி, பக்தர்கள் பால் குடம் ஊர்வலம் நடந்தது. சுப்புராயபிள்ளை சத்திரம் கென்னடி நகர் புற்றுமாரியம்மன் கோவில் உள்ளது. 4ம் ஆண்டு, பால்குட விழா நேற்று நடந்தது. இவ்விழாவையொட்டி, நேற்று காலை 6:00 மணிக்கு அபிேஷகம் செய்யப்பட்டது. தொடர்ந்து, சிறப்பு பூஜைகள் நடந்தன. தொடர்ந்து, 9:30 மணியளவில், வெள்ளந்தாங்கி அம்மன் கோவிலில் இருந்து பக்தர்கள் பால்குடம் எடுத்து வந்து நேர்த்தி கடன் செலுத்தினர். நிகழ்ச்சியில், பொதுமக்கள் கலந்து கொண்டு சுவாமி தரிசனம் செய்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை