உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / புதுச்சேரி /  நவீன கோழி வளர்ப்பு நான்கு நாள் பயிற்சி வகுப்பு: ஆதிதிராவிடர்களிடமிருந்து விண்ணப்பம் வரவேற்பு

 நவீன கோழி வளர்ப்பு நான்கு நாள் பயிற்சி வகுப்பு: ஆதிதிராவிடர்களிடமிருந்து விண்ணப்பம் வரவேற்பு

புதுச்சேரி: நவீன கோழி வளர்ப்பு பயிற்சி வகுப்பிற்கு ஆதிதிராவிடர்களிடமிருந்து விண்ணப்பம் வரவேற்கப்படுகின்றது. இது குறித்து ராஜிவ் காந்தி கால்நடை மருத்துவக் கல்வி மற்றும் ஆராய்ச்சி நிலைய புல முதல்வர் முருகவேல் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் கூறியிருப்பதாவது: ராஜிவ் காந்தி கால்நடை மருத்துவக் கல்வி மற்றும் ஆராய்ச்சி நிலையம், இந்திய வேளாண் ஆராய்ச்சி கவுன்சிலின் கீழ் செயல்படும் இந்திய வேளாண் உயிரி தொழில்நுட்ப நிறுவன நிதி உதவியுடன் இணைந்து நடத்தும், புதுச்சேரி கிராமப்புற ஆதிதிராவிடர் மக்களுக்கான நான்கு நாள் நவீன கோழி வளர்ப்பு பயிற்சி வகுப்பு கல்லூரி வளாகத்தில் வரும் 19 ம் முதல் 22 ம் தேதி வரை நடைபெற உள்ளது. இந்த பயிற்சியில் கோழியினங்கள், அடைகாக்கும் முறைகள், வளர்ப்பு முறைகள், தட்பவெப்ப சூழ்நிலைகளுக்கு ஏற்ப பராமரிப்பு முறைகள், சந்தைப்படுத்துதல், நோய் மேலாண்மை, இனப்பெருக்க மேலாண்மை மற்றும் குஞ்சு பொரிப்பக மேலாண்மை ஆகியவற்றில் பயிற்சி அளிக்கப்படும். இப்ப பயிற்சியில் கலந்து கொள்ள ஆர்வமுள்ள புதுச்சேரியை சார்ந்த ஆதிதிராவிடர் மக்கள் தங்களது சாதி சான்றிதழ் மற்றும் ஆதார் அட்டை நகலுடன் ராஜிவ் காந்தி கால்நடை மருத்துவக் கல்வி மற்றும் ஆராய்ச்சி நிலையத்தை தொடர்பு கொண்டு பயிற்சிக்கான விண்ணப்பத்தை பெற்றுக்கொண்டு, பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பத்தை கல்லூரி அலுவலகத்தில் சமர்ப்பிக்க வேண்டும். மேலும் தகவல்களுக்கு 9786000800, 094990 47100 தொலைபேசி எண்ணில் தொடர்பு கொள்ளவும். இவ்வாறு செய்தி குறிப்பில் கூறப்பட்டுள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

புதிய வீடியோ