உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / புதுச்சேரி / லேப்டாப் விடுபட்ட மாணவர்களுக்கு... பணம்; கவர்னருக்கு கோப்பு அனுப்பி வைப்பு

லேப்டாப் விடுபட்ட மாணவர்களுக்கு... பணம்; கவர்னருக்கு கோப்பு அனுப்பி வைப்பு

புதுச்சேரி: விடுபட்ட அரசு பள்ளி மாணவர்களுக்கு லேப்டாப்பிற்கு பதிலாக பணமாக தரபள்ளி கல்வித்துறை முடிவு செய்துள்ளது. இது தொடர்பாக முடிவெடுக்க கவர்னருக்கு கோப்பு அனுப்பப்பட்டுள்ளது. புதுச்சேரியில் கடந்த 2015ம் ஆண்டு முதல்வராக இருந்த ரங்கசாமி லேப்டாப் திட்டத்தை முதல் முதலில் அறிவித்தார். அந்தாண்டு ஆகஸ்ட் மாதம் 15ம் தேதி இலவச லேப்டாப் திட்டம் துவக்கி வைக்கப்பட்டது. தொடர்ந்து 20 கோடி ரூபாய் செலவில் 2013-14 மற்றும் 2014-15ம் ஆண்டு பிளஸ் 2 முடித்த மாணவர்களுக்கு லேப்டாப் வழங்கப்பட்டது. அதன்பிறகு, நிதி நெருக்கடி மற்றும் ஆட்சி மாற்றத்தாலும் இத்திட்டம் கிடப்பில் போடப்பட்டது. தொடர்ந்து பல ஆண்டுகளுக்கு பிறகு மீண்டும் அரசு பள்ளி மாணவர்களுக்கு லேப்டாப் வழங்கும் திட்டம் கடந்தாண்டு ஜனவரி 23ம் தேதி மீண்டும் துவங்கப்பட்டது. 2023--24 கல்வியாண்டில் பிளஸ்1 மற்றும் பிளஸ்2 வகுப்புப் பயிலும் மாணவ மாணவியருக்கு ரூ.68 கோடியில் இலவச லேப்டாப் வழங்கப்பட்டது. இந்த லேப்டாப் மத்திய அரசின் போர்ட்டலில் இருந்து கொள்முதல் செய்து வழங்கப்பட்டது. லேப்டாப்பில் சி.பி.எஸ்.இ., பாடத்திட்டம் இடம் பெற்றிருந்தது. இந்த லேப்டாப்பை மாணவர்கள் தினசரி பள்ளிக்கு கொண்டுவர வேண்டும் என பள்ளி கல்வித் துறை அறிவுறுத்தியது. இருப்பினும், 2022-23 ஆண்டு பயின்ற அரசு பள்ளி மாணவர்களுக்கு லேப்டாப் வழங்கப்படவில்லை. விடுப்பட்ட இந்த அரசு பள்ளி மாணவர்களுக்கும் இலவச லேப்டாப் வழங்க வேண்டும் என பல்வேறு தரப்பினர் கோரிக்கை விடுத்தனர். இம்மாணவர்களுக்கு, லேப்டாப்பிற்கு பதிலாக பணமாக வழங்கிட, தற்போது புதுச்சேரி அரசு முடிவு செய்துள்ளது. இது தொடர்பான கோப்பு பள்ளி கல்வித் துறை வாயிலாக கவர்னரின் ஒப்புதலுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. கவர்னரின் அனுமதி கிடைத்ததும் 8 ஆயிரம் மாணவர்களுக்கு இலவச லேப்டாப்பிற்கு பதில், பணமாக அவர்களு வங்கி கணக்கில் வரவு வைக்க திட்டமிடப்பட்டுள்ளது. அரசு பள்ளி மாணவர்களுக்கான லேப்டாப் 7 ஆயிரம் முதல் 8 ஆயிரம் ரூபாய் வரை கொள்முதல் செய்யப்படுகின்றது. எனவே இத்தொகை விடுபட்ட மாணவர்களுக்கு கிடைக்க வாய்ப்புள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 1 )

என்றும் இந்தியன்
ஆக 26, 2025 16:38

ஒரு அறிவிலி முதல்வர் என்றால் இப்படித்தான் நடக்கும் 1 படிக்கும் குழந்தைகளுக்கு லேப்டாப் அவசியமில்லை. அப்படி அவசியம் ஏற்படும் பட்சத்தில் அவர்கள் வீட்டில் அவர்களே ஒரு லேப்டாப் வாங்கி வைத்துக்கொள்வார்கள் 2 லேப்டாப் விலை ரூ 7000 - 8000 கொள்முதல் விலை அரசிற்கு அந்த பணம் இவர்களுக்கு கொடுக்கப்படும். வெளி மார்க்கெட்டில் ஒரு லேப்டாப் ரூ 12,900 Amazon ல் ரூ 30,000 லேப்டாப் குறைந்த விலையில் அமேசான் கொடுக்கின்றது. அரசு மொத்த கொள்முதல் செய்யும் பட்சத்தில் அவர்களுக்கு குறைந்த விலைக்கு லேப்டாப் நிறுவனம் கொடுக்கும் வியாபார அவசியத்தினால். இந்த ரூ 7000-8000 கொடுத்தால் லேப்டாப் அதனுடன் ரூ 5,000 அதிகம் போட்டு வாங்க முடியாது. அந்த பணம் அந்த குடும்பம் குடும்ப செலவிற்கு உபயோகப்படுத்திக்கொள்ளும் லேப்டாப் வாங்காமல். ஆகவே இந்த பணம் கொடுப்பதினால் என்ன உபயோகம். இப்படி சின்ன சின்ன செலவுகளாக செய்தால் அரசு ஏற்கனவே மைனஸ் - அதாவது வரவு ரெண்டணா செலவு நாலணா அளவில் இருக்கும் போதும் இந்த மாதிரி செலவு செய்வது ஏன். வெறும் ஓட்டு வாங்கத்தான். Total expenditure excluding debt repayment in 2025-26 is targeted at Rs 4,39,293 crore. Receipts excluding borrowings of Rs 3,32,325 crore and net borrowings of Rs 1,05,000 கிராரே. வருடாவருடம் ரூ 1லட்சம் கோடி கடன். இந்த ஆட்சியில் வரவு செலவு ஒரு எழவு மாதிரி ரூ 5 லட்சம் கோடி 5 ஆக மொத்தம் கடன் டாஸ்மாக்கினாட்டில் இன்று வரை ரூ 4.2 லட்சம் கோடி கடன் admk ஆட்சியில் இன்று dmk ஆட்சியில் அது ரூ 9.2 லட்சம் கோடி ஆகிவிட்டது. கொஞ்சம் கூட இந்த dmk அரசுக்கு அறிவென்பதே இல்லையா இந்த கடனை தீர்ப்பது யார்???நான் டாஸ்மாக்கினாட்டு முதல்வர் ஆகியிருந்தால் dmk ஸ்டாலினிடம் இருக்கும் ரூ 12 லட்சம் கோடியை பிடுங்கி டாஸ்மாக்கினாட்டுக்கு வரவு வைத்து கடனை தீர்த்திருப்பேன். வரவில்லாமல் செலவுகள் செய்து வாழ்ந்திருப்போமே என்ற பாட்டு வரிகள் தான் ஞாபகம் வருகின்றது.


அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை