உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / புதுச்சேரி / 2 குழந்தைகளுடன் தாய் மாயம்

2 குழந்தைகளுடன் தாய் மாயம்

நெட்டப்பாக்கம் : இரண்டு குழந்தைகளுடன் தாய் மாயமானது குறித்து போலீசார் விசாரித்து வருகின்றனர். நெட்டப்பாக்கம் அடுத்த கல்மண்டபம் புதுநகரை சேர்ந்தவர் அருள்மணி, 36; கொத்தனார். இவர், பண்டசோழநல்லுார், சூரியன்பேட் பகுதியை சேர்ந்த ஆர்த்தி, 24, என்பவரை காதல் திருமணம் செய்து கொண்டனர். இவர்களுக்கு ஜனனி, ஷர்மிதா என்ற 2 பெண் குழந்தைகள் உள்ளனர். அருள்மணி, நேற்று முன்தினம் காலை வழக்கம் போல் கொத்தனார் வேலைக்கு சென்றார். வேலை முடிந்து மாலை வீட்டிற்கு வந்து பார்த்த போது மனைவி மற்றும் 2 குழந்தைகளையும் காணவில்லை. உறவினர்கள், தோழிகளிடம் விசாரித்தபோது எந்த தகவலும் கிடைக்கவில்லை. இதுகுறித்து அருள்மணி கொடுத்த புகாரின் பேரில், நெட்டப்பாக்கம்போலீசார் வழக்குப் பதிந்து, அவர்களை தேடி வருகின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை