தாய் கண்டிப்பு மகன் தற்கொலை
காரைக்கால் : மது அருந்தியதை தாய் கண்டித்ததால் மகன் துாக்குப்போட்டு தற்கொலை செய்துகொண்டார்.காரைக்கால் நிரவி மதகடி தோமாஸ் அருள் திடல் பகுதியை சேர்ந்த ஏசுமேரி . இவரது மகன் மேத்யூஸ் ,22; இவர் கோயம்புத்துாரில் உள்ள காய்கறி கடையில் வேலை செய்து வந்தார். கடந்த ஆறு மாதங்களாக மகன் வேலைக்கு செல்லாமல் மேத்யூஸ் தினம் குடித்துவிட்டு வருவது வழக்கம். இதனை ஏசுமேரி கண்டித்தால் மனமுடைந்த மேத்யூஸ் வீட்டின் படுக்கறையில் துாக்குப்போட்டு கொண்டார். உடன் அவரது உறவினர்கள் அவரை மீட்டு அரசு பொது மருத்துவமனைக்கு அழைத்துச்சென்றனர். அங்கு அவரை பரிசோதித்த டாக்டர்கள் அவர் இறந்துவிட்டதாக தெரிவித்தனர். இது குறித்து நிரவி போலீசார் வழக்குப் பதிந்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.