உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / புதுச்சேரி /  இசை, நாட்டிய நிகழ்ச்சி மாணவ மாணவியருக்கு பரிசளிப்பு

 இசை, நாட்டிய நிகழ்ச்சி மாணவ மாணவியருக்கு பரிசளிப்பு

புதுச்சேரி: மாசி மகம் வரவேற்பு விழா கலை நிகழ்ச்சியில் பங்கேற்ற மாணவ மாணவியருக்கு, காங்., சீனியர் துணைத் தலைவர் தேவதாஸ் சான்றிதழ் வழங்கினார். புதுச்சேரி மாசி மக தீர்த்தவாரிக்கு வந்துள்ள தீவனுார் பொய்யாமொழி விநாயகர், செஞ்சி ரங்கநாதர், மயிலம் சுப்ரமணியன், மேல்மலையனுார் அங்காள பரமேஸ்வரி, திண்டிவனம் பெருமாள் ஆகிய சுவாமிகளுக்கு, சாரம் மாசி மகம் வரவேற்பு குழு சார்பில் நேற்று முன்தினம் இரவு வரவேற்பு அளிக்கப்பட்டது. விழாவை முன்னிட்டு, சாரம் அவ்வை திடலில் பல்வேறு கலை நிகழ்ச்சிகளுக்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இதன் ஒரு பகுதியாக, சாரதா கலா மந்திர் மாணவ மணவியர் பங்கேற்ற இசை மற்றும் நாட்டிய நிகழ்ச்சில் நடந்தது. விழாவில், புதுச்சேரி மாநில காங்., சீனியர் துணைத் தலைவரும், காமராஜ் நகர் தொகுதி பொறுப்பாளருமான தேவதாஸ் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு மாணவ, மாணவிகளுக்கு சான்றிதழ் வழங்கினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்







முக்கிய வீடியோ