உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / புதுச்சேரி / இரட்டை குடியுரிமையுடன் விண்ணப்பித்தவர்களுக்கு... நோட்டீஸ்; எம்.பி.பி.எஸ்., மருத்துவ படிப்பில் சென்டாக் அதிரடி

இரட்டை குடியுரிமையுடன் விண்ணப்பித்தவர்களுக்கு... நோட்டீஸ்; எம்.பி.பி.எஸ்., மருத்துவ படிப்பில் சென்டாக் அதிரடி

புதுச்சேரி : இரட்டை குடியுரிமை சந்தேகம் எழுந்துள்ள மாணவர்களுக்கு சென்டாக் ேஷாகாஸ் நோட்டீஸ் அனுப்பி விளக்கம் பெற்றுள்ளது. இம்மாணவர்கள் தரவரிசை பட்டியலில் இருந்து நீக்கப்பட உள்ளனர். சென்டாக் எம்.பி.பி.எஸ்., கலந்தாய்வில் பிற மாநில மாணவர்கள் இரட்டை குடியுரிமையுடன் புதுச்சேரி மாணவர்களின் மருத்துவ இடங்களை அபகரிக்க ஒவ்வொரு ஆண்டும் முயற்சி வருகின்றனர். இதற்காக போலி சான்றிதழ்களையும் சமர்பிக்கின்றனர். இந்தாண்டும், இரட்டை குடியுரிமை பிரச்னை வெடித்தது. 14 மாணவர்கள் போலி சான்றிதழ்களை கொடுத்து புதுச்சேரி மாணவர்களின் சீட்டுகளை அபகரிக்க விண்ணப்பித்துள்ளதாக பெற்றோர், மாணவர்கள் புகார் தெரிவித்தனர். அதை தொடர்ந்து சுகாதார துறை, சென்டாக் இணைந்து மாணவர்களின் சான்றிதழ்களை ஆய்வு செய்து வந்தது. இரட்டை குடியுரிமையுடன் சென்டாக்கில் விண்ணப்பித்துள்ள 14 மாணவர்களுக்கும் சென்டாக் ேஷாகாஸ் நோட்டீஸ் அனுப்பியுள்ளது. அரசு ஒதுக்கீட்டு இடங்களுக்கு விண்ணப்பிக்கும் மருத்துவ மாணவர் ஒருவர், ஒரு மாநிலத்தில் மட்டுமே விண்ணப்பிக்க வேண்டும். இரண்டு மாநிலங்களில் அரசு ஒதுக்கீட்டு இடங்களுக்கு விண்ணப்பித்துள்ளதால் அது இரட்டை குடியுரிமையாக கருதி ேஷாகாஸ் நோட்டீஸ் அனுப்பி விளக்கம் கேட்கப்பட்டுள்ளது. தமிழகத்தில் மருத்துவ தரவரிசை பட்டியலை சென்டாக் தரவரிசை பட்டியலுடன் ஒப்பிட்டபோது 8 மாணவர்கள் சிக்கினர். இவர்களுக்கு ேஷாகாஸ் நோட்டீஸ் அனுப்பியதில் ஒரு மாணவர் மட்டுமே விளக்கம் தந்துள்ளார். ஆனால் அதுவும் ஏற்றுக்கொள்ளும்படியாக இல்லை. இதேபோல் கேரளா மாநில மருத்துவ தரவரிசை பட்டியலில் சென்டாக் தரவரிசை பட்டியலுடன் ஒப்பிட்டபோது, 4 மாணவர்கள் இரண்டு மெரிட் லிஸ்ட் பட்டியலில் இருந்தனர். இவர்களுக்கு ேஷாகாஸ் நோட்டீஸ் அனுப்பியதில், இரண்டு மாணவர்கள் மட்டுமே பதில் அளித்துள்ளனர். கேரளா மாநிலத்தினை பொருத்தவரை கேரளா-1, நான்-கேரளா 2 என்று வகையில் மருத்துவ படிப்புகளுக்கு விண்ணப்பிக்கலாம். இதில் கேரளா-1 தான் அரசு ஒதுக்கீட்டு இடங்களை குறிக்கும். நான்-கேரளா மேலாண்மை இடங்களை குறிக்கும். சென்டாக்கிற்கு விண்ணப்பித்துள்ள இம்மாணவர்கள், நான் கேரளா திட்டத்தின் கீழ் விண்ணப்பித்துள்ளதாக தங்களுடைய பதிலில் தெரிவித்துள்ளனர். இவர்கள் புதுச்சேரி மேலாண்மை சீட்டுகளுக்கு சட்டப்படி விண்ணப்பிக்க முடியும். இருப்பினும் இம்மாணவர்களிடம் அனைத்து பதில்களையும் பெற்ற சென்டாக் மேல் நடவடிக்கைக்காக சுகாதார துறைக்கு அனுப்பி வைத்துள்ளது. விரைவில் பதில் தராத மாணவர்கள் தரவரிசை பட்டியலில் இருந்து நீக்கப்பட உள்ளனர். இதேபோல் தொடர்ந்து ஒவ்வொரு மாநில மருத்துவ மாணவர்களின் தரவரிசை பட்டியலுடன் ஒப்பிட்டு பார்த்து இரட்டை குடியுரிமை உள்ள மாணவர்களை நீக்க அரசு திட்டமிட்டுள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

புதிய வீடியோ