மேலும் செய்திகள்
மாவட்டத்தில் உலக யோகா தின விழா கொண்டாட்டம்
22-Jun-2025
புதுச்சேரி:லாஸ்பேட்டை, செல்லப்பெருமாள்பேட், விவேகானந்தா மேல்நிலைப் பள்ளியில் பிளஸ் 1 மாணவர்களுக்கான நாட்டு நலப்பணித்திட்டம் அறிமுக விழா நடந்தது.விழாவிற்கு, பள்ளியின் முதன்மை முதல்வர் பத்மா தலைமை தாங்கினார். நாட்டு நலப்பணித்திட்ட மாநில ஒருங்கிணைப்பாளர் சதீஷ்குமார் கலந்து கொண்டு, விழாவை குத்து விளக்கேற்றி துவக்கி வைத்தார்.நாட்டு நலப்பணித்திட்ட பள்ளி ஒருங்கிணைப்பாளர் கலைவாணி, நாட்டு நலப்பணித்திட்டத்தின் அவசியம் குறித்து மாணவர்களுக்கு எடுத்துரைத்தார். பள்ளின் முதல்வர் கீதா முன்னிலை வகித்தார்.ஏற்பாடுகளை பள்ளியின் நாட்டு நலப்பணித்திட்ட அலுவலர் வளர்மதி மற்றும் உடற்கல்வி ஆசிரியர்கள் செய்திருந்தனர்.
22-Jun-2025