ஆபாச பேச்சு : இருவர் கைது
புதுச்சேரி : பொது இடத்தில் ஆபாசமாக பேசிய இருவரை போலீசார் கைது செய்தனர். சேதாரப்பட்டு போலீசார் நேற்று முன்தினம் ரோந்து பணியில் ஈடுப்பட்டனர். சேதாரப்பட்டு பிப்டிக் தொழிற்சாலை பகுதியில் பிள்ளையார்குப்பம் நடுத்தெருவைச் சேர்ந்த பிரகாஷ்ராஜ் 24, ராமநாதபுரம் மருத்துவமனை வீதியைச் சேர்ந்த மனோகர் 26, ஆகியோர் பொதுமக்களை ஆபாசமாக திட்டிக் கொண்டிருந்தனர். போலீசார் அவர்களை கைது செய்தனர்.