உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / புதுச்சேரி /  ஆபாச பேச்சு: இருவர் கைது

 ஆபாச பேச்சு: இருவர் கைது

அரியாங்குப்பம்: பொதுமக்களை அவதுாறாக பேசிய இருவரை போலீசார் கைது செய்தனர். கடலுார் சாலை, தவளக்குப்பம் சந்திப்பு அருகில் நின்று கொண்டு அவ்வழியாக செல்லும் பொதுமக்களை அவதுாறாக பேசி வருவதாக தவளக்குப்பம் போலீசாருக்கு நேற்று முன்தினம் தகவல் வந்தது. அதையடுத்து போலீசார் அங்கு நின்ற இருவரை பிடித்து விசாரித்தனர். அவர், அரியாங்குப்பம், மணவெளியை சேர்ந்த வாஞ்சியநாதன், 37, என்பதும், மற்றொருவர் நைனார்மண்டபத்தை சேர்ந்த அவிந்த், 36, என்பது தெரியவந்தது. அவர்கள் இருவரையும் போலீசார் கைது செய்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை