மூதாட்டி துாக்கிட்டு தற்கொலை
பாகூர்: பாகூர் வடக்கு வீதியை சேர்ந்தவர் சுந்தராஜன் 61; ஓய்வு பெற்ற தாசில்தார். இவரது தாய் சுப்புலட்சுமி 78; இவர் கடந்த 10 ஆண்டுகளுக்கு முன்பு தனது சிறுநீரகங்களில் ஒன்றை, உடல் நிலை பாதிக்கப்பட்ட தனது இளைய மகள் தாரகேஸ்வரிக்கு தானமாக கொடுத்துள்ளார். அடுத்த சில ஆண்டுகளில் தாரகேஸ்வரி இறந்து விட்டதால், சுப்புலட்சுமி வேதனையில் இருந்து வந்தார். இதனால், அவரது உடல் நிலையும் பாதிக்கப்பட்டது. மேலும் தோல் பாதிப்பு நோயாலும் அவதிப்பட்டு வந்தார். இந்நிலையில், சுந்தராஜன் நேற்று காலை, உணவு கொடுக்க சென்ற போது, அவரது தாய் சுப்புலட்சுமி மின் விசிறியில் கயிற்றால் துாக்கிட்டு தற்கொலை செய்துகொண்டார்.பாகூர் போலீசார், மூதாட்டியின் உடலை மீட்டு, பிரேத பரிசோதனைக்கு கதிர்காமம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். புகாரின் பேரில், போலீசார் வழக்குப் பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.