உள்ளூர் செய்திகள்

 மூதாட்டி மாயம்

புதுச்சேரி: முதியோர் இல்லத்தில் இருந்து வெளியில் சென்ற மூதாட்டி மாயமானது குறித்து போலீசார் விசாரித்து வருகின்றனர். பாகூர் அடுத்த அரங்கனுார் பகுதியை சேர்ந்தவர் மனோகர் மனைவி திலகவதி, 72. இவர், மங்கலம் அடுத்த கோர்க்காட்டில் உள்ள தனியார் முதியோர் இல்லத்தில் தங்க வைக்கப்பட்டிருந்தார். கடந்த 7ம் தேதி முதியோர் இல்லத்தில் இருந்து வெளியில் சென்றவரை காணவில்லை. பல இடங்களில் தேடியும் கிடைக்கவில்லை. முதியோர் இல்லத்தின் நிர்வாகி மோகன் கொடுத்த புகாரின் பேரில், மங்கலம் போலீசார் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை