மேலும் செய்திகள்
மயங்கி விழுந்தவர் சாவு
24-May-2025
அரியாங்குப்பம் : மது போதையில் வீட் டுக்கு வந்த பெயிண்டர் மயங்கி விழுந்து இறந்தார்.தவளக்குப்பம் அடுத் பூரணாங்குப்பத்தை சேர்ந்தவர் சக்திவேல், 43, இவருக்கு ரத்த அழுத்தம், நீரிழிவு நோய் இருந்தது. காருக்கு பெயிண்ட் அடிக்கும் வேலை செய்து வந்தார். இவர், நேற்று முன்தினம் வேலை முடித்துவிட்டு மது போதையில் வீட்டு வந்தவர் திடீரென மயங்கி விழுந்தார்.அவரது மனைவி, அவரை மீட்டு, புதுச்சேரி அரசு மருத்துவமனையில் சேர்த்தார். பரிசோதனை செய்த டாக்டர்கள் சக்திவேல் ஏற்கனவே இறந்து விட்டதாக தெரிவித்தனர்.இதுகுறித்து, தவளக் குப்பம் போலீசார் வழக்கு பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
24-May-2025