ரவுடிகளின் வீடுகளில் போலீசார் சோதனை
அரியாங்குப்பம்: தவளக்குப்பம் பகுதியில் ரவுடிகளின் வீடுகளில் போலீசார் சோதனை நடத்தினர். தெற்கு பகுதி எஸ்.பி. , ஜிந்தா கோதண்டராமன் தலைமையில், தவளக்குப்பம் சப் இன்ஸ்பெக்டர் ஜெயகுருநாதன் மற்றும் போலீசார் ரவுடிகளின் வீடுகளின் நேற்று சோதனை நடத்தினர். அதில், தவளக்குப்பம், தானாம்பாளையம், நல்லவாடு, பூரணாங்குப்பம், புதுக்குப்பம் ஆகிய பகுதியில் உள்ள ரவுடிகளின் வீடுகளில், ஆயுதங்கள் மற்றும் கஞ்சாவை பதுக்கி வைத்துள்ளனரா என சோதனை செய்தனர்.