உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / புதுச்சேரி /  ரவுடிகளின் வீடுகளில் போலீசார் சோதனை

 ரவுடிகளின் வீடுகளில் போலீசார் சோதனை

அரியாங்குப்பம்: அரியாங்குப்பம், தவளக்குப்பம் பகுதிகளில் உள்ள ரவுடிகளின், வீடுகளில் போலீசார் சோதனை நடத்தினர். புத்தாண்டு விழா நாளை கொண்டாடப்படுகிறது. அதையொட்டி, தெற்கு எஸ்.பி., ஜிந்தா கோதண்டராமன் தலைமையில், இன்ஸ்பெக்டர் ஆறுமுகம், சப் இன்ஸ்பெக்டர்கள், முருகானந்தம், ஜெயகுருநாதன் மற்றும் போலீசார் நேற்று ரவுடிகளின் வீடுகளில் சோதனை நடத்தினர். அரியாங்குப்பம், தவளக்குப்பம் ஆகிய பகுதிகளில் உள்ள ரவுடிகளின் வீடுகளின், சோதனை நடத்திய சம்பவம், அப்பகுதிகளில் பரபரப்பு ஏற்படுத்தியது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்





புதிய வீடியோ