மேலும் செய்திகள்
கோயில்களில் சிவராத்திரி கொண்டாட்டம்
28-Feb-2025
பாகூர்: பாகூர் வேதாம்பிகை சமேத மூலநாதர் சுவாமி கோவிலில், நேற்று முன்தினம் பிரதோஷ வழிபாடு நடந்தது. இதையோட்டி, நேற்று முன்தினம் காலை 9.00 மணிக்குவேதாம்பிகையம்மன், மூலநாதர், பால விநாயகர், முருகர், சண்டிகேஸ்வரருக்கு சிறப்பு அபிஷேகம், மாலை 4:30 மணிக்கு சனி மகா பிரதோஷ வழிபாடு நடந்தது. இதில், கோவில் கொடிமரம் எதிரே, வடக்கு திசை நோக்கி செவி சாய்த்து அருள் பாலிக்கும் செல்வ நந்தி பெருமானுக்கு சிறப்பு அபிஷேகம் நடந்தது. மாலை 6:00 மணிக்கு மகா தீபாராதனை நடந்தது. திரளான பக்தர்கள் தரிசனம் செய்தனர். ஏற்பாடுகளை, கோவில் நிர்வாக அதிகாரி மற்றும் அர்ச்சகர்கள் செய்திருந்தனர்.
28-Feb-2025