உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / புதுச்சேரி / நலத்திட்ட உதவிகள் வழங்கும் நிகழ்ச்சி

நலத்திட்ட உதவிகள் வழங்கும் நிகழ்ச்சி

நெட்டப்பாக்கம்: நெட்டப்பாக்கம் தொகுதியைச் சேர்ந்த கருவுற்ற தாய்மார்களுக்கு நலத்திட்ட உதவிகளை துணை சபாநாயகர் ராஜவேலு வழங்கினார்.ஆதி திராவிடர் மற்றும் பழங்குடியினர் நலத்துறை மூலம், நெட்டப்பாக்கம் தொகுதியைச் சேர்ந்த கருவுற்ற தாய்மார்களுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கும் நிகழ்ச்சி, கரியமாணிக்கம் அரசு மாணவர் விடுதி வளாகத்தில் நேற்று நடந்தது.நிகழ்ச்சியில், துணை சபாநாயகர் ராஜவேலு கலந்து கொண்டு, 67 கருவுற்ற தாய்மார்களுக்கு ரூ. 18 ஆயிரம் விதம், ரூ. 12 லட்சத்து 6 ஆயிரமும், அதேபோல், திருமண உதவித்தொகையாக 20 நபர்களுக்கு ரூ. ஒரு லட்சம் வீதம் 20 லட்சம் ரூபாய்க்கான ஆணையினை வழங்கினார். நிகழ்ச்சியில் நலத்துறை ஆய்வாளர் ஏழுமலை, நலத்துறை ஊழியர்கள் சதீஷ், சுபாஷ் உள்பட பலர் கலந்து கொண்டனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை