மாணவர்களுக்கு ஊக்க தொகை வழங்கல்
: புதுச்சேரி: புதுச்சேரி, கவிஞர் பசுபதி தமிழ் பணி, அறக்கட்டளை சார்பில், மாணவர்களுக்கு ஊக்க தொகை வழங்கப்பட்டது. அறக்கட்டளை சார்பில், தமிழ் வழியில் பள்ளிக் கல்வியை படித்து, மேற்படிப்பு படித்து வரும் மாணவர்களை ஊக்குவிக்கும் வகையில், ஊக்க தொகை வழங்கும் நிகழ்ச்சி நடந்தது. அதில், அன்னை தெரசா சுகாதார மேற்படிப்பு மற்றும் ஆராய்ச்சி நிலையத்தில், பயிலும், மாணவ, மாணவிகளுக்கு, கல்லுாரி புல முதல்வர் ஐயப்பன் ஊக்க தொகையை, வழங்கினார். அறக்கட்டளை நிறுவன தலைவர்சுந்தராம்பாள் முன்னிலை வகித்தார். நிகழ்ச்சியில், பேராசிரியர்கள், மாணவர்கள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.