உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / புதுச்சேரி / மாணவர்களுக்கு குடை வழங்கல்

மாணவர்களுக்கு குடை வழங்கல்

திருக்கனுார்: திருக்கனுார் கோவில் நகரம் லயன்ஸ் கிளப் சார்பில், பாலபாடிக்குப்பம் அரசு நிதி உதவி தொடக்கப்பள்ளி மாணவர்களுக்கு குடை வழங்கும் நிகழ்வு நடந்தது.நிகழ்ச்சியில் தலைமை ஆசிரியர் ரமேஷ் வரவேற்றார்.திருக்கனுார் கோவில் நகரம் லயன்ஸ் கிளை தலைவர் சங்கீதா செந்தில்வேலன் தலைமை தாங்கினார். லயன்ஸ் கிளப் மண்டல தலைவர் செந்தில்வேலன்,தொழிலதிபர் சக்திமுருகன் ஆகியோர் மாணவ, மாணவிகளுக்கு இலவச குடை மற்றும் கல்வி உபகரணங்கள் வழங்கினர். இதில், கிளப் நிர்வாகிநாசிம்,பள்ளி ஆசிரியர்கள், மாணவர்கள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

முக்கிய வீடியோ