மேலும் செய்திகள்
உலகம் முழுவதும் முடங்கிய எக்ஸ் வலைதளம்; பயனர்கள் தவிப்பு
1 hour(s) ago | 1
காரைக்கால் : காரைக்காலில் கடன் தர மறுத்த மளிகை கடைக்காரரை தாக்கிய ரவுடியை போலீசார் தேடி வருகின்றனர்.காரைக்கால் நெடுங்காடு பண்டாரவாடை நல்லாத்தூர் சாலையைச் சேர்ந்த வில்வமங்களம், 38. மளிகை கடை நடத்தி வருகிறார். நேற்று முன்தினம் இரவு கடைக்கு வந்த குரும்பகரம் கன்னிக்கோவில் வீதியைச் சேர்ந்த ரவுடி மொட்டையன்(எ) முருகன், 35, கடன்கேட்டுள்ளார். அதற்கு அவர் மறுத்துள்ளார்.இதனால் ஆத்திரமடைந்த ரவுடி மொட்டையன், மளிகை கடைக்காரரை தாக்கி, கொலை மிரட்டல் விடுத்துள்ளார்.இதுகுறித்த புகாரின் பேரில் நெடுங்காடு போலீஸ் சப் இன்ஸ்பெக்டர் தியாகராஜன் வழக்குப் பதிந்து, ரவுடியை தேடி வருகின்றனர்.
1 hour(s) ago | 1