உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / புதுச்சேரி / நெல் கொள்முதல் விலை குறைவு புதுச்சேரி விவசாயிகள் ஏக்கம்

நெல் கொள்முதல் விலை குறைவு புதுச்சேரி விவசாயிகள் ஏக்கம்

புதுச்சேரி மாநிலத்தில் சொர்ணாவாரி பட்டத்தில் 5 ஆயிரம் எக்டேருக்கு அதிகமான பரப்பளவில் ஏ.டீ.டி. 37, கோ 51, சின்ன பொன்னி, ஐ.ஆர். 50 உள்ளிட்ட நெல் ரகங்கள் பயிரிடப்பட்டது. தற்போது, நெற்கதிர்கள் முற்றிய நிலையில் அருவடை செய்யும் பணி நடைபெற்று வருகிறது.தட்டாஞ்சாவடி மார்கெட் கமிட்டியில், கடந்த 9ம் தேதி நிலவரப்படி, நெல் விலை (75 கிலோ) மூட்டை அதிகபட்சமாக 1341 ரூபாய் கொள்முதல் செய்யப்பட்டது.இந்த விலையை, தமிழகத்துடன் ஒப்பிட்டு பார்க்கும் போது, கிலோ ஒன்றுக்கு 7 ரூபாய் புதுச்சேரியில் குறைவாக உள்ளது. தமிழகத்தில், நுகர்பொருள் வாணிப கழகம் மூலமாக, 40 கிலோ நெல் மூட்டை 960 ரூபாய்க்கு கொள்முதல் செய்யப்படுகிறது.தமிழகத்தில் நெல் கொள்முதல் விலை அதிகமாக இருப்பது, புதுச்சேரி விவசாயிகளை ஏக்கமடைய செய்துள்ளது. இந்திய உணவு கழகம் மூலமாக நேரடியாக நெல்லை கொள்முதல் செய்தால், தான் நெல்லுக்கான குறைந்த பட்ச ஆதார விலை கிடைக்கும்.எனவே, இந்திய உணவுக்கழகம் மூலமாக நேரடி கொள்முதல் நிலையங்களை திறந்து, நெல்லுக்கு குறைந்த பட்ச ஆதார விலையை கிடைக்க செய்திட, அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை