உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / புதுச்சேரி / ஓய்வு பெற்ற அரசு ஊழியர் பலி

ஓய்வு பெற்ற அரசு ஊழியர் பலி

புதுச்சேரி : ஓய்வு பெற்ற அரசு ஊழியர் தொடர் இருமல் ஏற்பட்டு இறந்தார்.வில்லியனுார் அடுத்த திருக்காஞ்சி முதல் தெருவைச் சேர்ந்தவர் பொன்னுசாமி 64, ஓய்வு பெற்ற அரசு நிறுவன ஊழியர். இவர் நேற்று முன்தினம் காலை அவரது நிலத்திற்கு சென்று, காலை 9.30 மணியளவில் வீட்டில் உணவு அருந்தினார். பின் அவருக்கு தொடர்ந்து இருமல் ஏற்பட்டு வாந்தி எடுத்தார். உறவினர்கள் மீட்டு கரிக்கலாம்பாக்கம் அரசு மருத்துவமனைக்கு அழைத்து சென்றனர். அங்கு பரிசோதித்த டாக்டர் வரும் வழியில் இறந்து விட்டதாக தெரிவித்தனர். இதுகுறித்து அவரது மகன் சதீஷ்குமார் கொடுத்த புகாரின் பேரில் மங்கலம் போலீசார் வழக்குப்பதிந்து விசாரித்து வருகின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை