உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / புதுச்சேரி /  ஞாயிற்றுகிழமையில் சிறப்பு முகாம் பொதுமக்களுக்கு  படிவம் வழங்கல் 

 ஞாயிற்றுகிழமையில் சிறப்பு முகாம் பொதுமக்களுக்கு  படிவம் வழங்கல் 

புதுச்சேரி: லாஸ்பேட்டை, காலாப்பட்டு தொகுதியில் விடுபட்ட வாக்காளர் களுக்கு கணக் கெடுப்பு படிவம் வழங்கப் பட்டது. புதுச்சேரியில் சிறப்பு தீவிர வாக்காளர் பட்டியல் திருத்த பணி கடந்த 4ம் தேதி முதல் நடந்து வருகிறது. வீடு வீடாக வாக்காளர்களுக்கு படிவம் வழங்கப்பட்டது. படிவம் கிடைக்காத லாஸ்பேட்டை, காலாப்பட்டு தொகுதி மக்களுக்கு அந்தந்த ஓட்டுச் சாவடிகளில் சிறப்பு முகாம் நடத்தி, கணக்கெடுப்பு படிவம் நேற்று வழங்கப்பட்டது. ஓட்டுச் சாவடி நிலை அதிகாரிகள் வழங்கினர். மேலும் பூர்த்தி செய்த படிவங்களையும் பொதுமக்கள் சமர்ப்பித்தனர். அவற்றையும் ஓட்டுச்சாவடி நிலை அதிகாரிகள் பெற்றுக்கொண்டனர். இப்பணியை வாக்காளர் பதிவு-6 சுரேஷ்ராஜ் ஆய்வு செய்தார். ஆய்வின்போது உதவி பதிவு அதிகாரி சந்தோஷ் உடனிருந்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்



அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை