உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / புதுச்சேரி /  மழைக்கால முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் குறித்து ஆய்வு

 மழைக்கால முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் குறித்து ஆய்வு

புதுச்சேரி: தட்டாஞ்சாவடி தொகுதியில் மழைக்கால முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் குறித்து முன்னாள் எம்.எல்.ஏ., அசோக் ஆனந்து ஆய்வு செய்தார். தட்டாஞ்சாவடி தொகுதி கொக்கு பார்க் மற்றும் வெங்கடேஸ்வரா நகர் பகுதிகள் வழியாக செல்லும் வாய்க்கால்களில், ஏற்பட்டுள்ள அடைப்புகளை அகற்ற வேண்டும் என அப்பகுதி மக்கள் முன்னாள் எம்.எல்.ஏ., அசோக் ஆனந்திடம் கோரிக்கை வைத் தனர். தொடர்ந்து அவர் சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகளுடன் அப்பகுதியில் ஆய்வு மேற்கொண்டார். தொடர்ந்து அப்பகுதிகளில் பகுதியில் தேங்கியிருந்த மணல் மற்றும் கழிவுகளை அகற்றவும், உடைந்திருந்த குழாய்களை சீரமைக்கவும் அதிகாரிகளிடம் கேட்டுக் கொண் டார். மழைக்காலங்களில் இப்பகுதிகளில், பொது மக்கள் பாதிக்காத வகையில், அனைத்து நடவடிக்கை எடுக்கப் படும என, தெரிவித் தார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !