உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / புதுச்சேரி /  மதிஒளி அரிச்சுவடி நுாலகத்தில் கோடை முகாம் நிறைவு

 மதிஒளி அரிச்சுவடி நுாலகத்தில் கோடை முகாம் நிறைவு

புதுச்சேரி: மூலக்குளம் மதிஒளியின் அரிச்சுவடி நுாலகத்தில் நடந்த சிறுவர்களுக்கான கோடை முகாம் நிறைவு விழா நடந்தது. மூலக்குளத்தில் மதிஒளியின் அரிச்சுவடி பொது நுாலகம் இயங்கி வருகிறது. இந்த நுாலகத்தில் சிறுவர்களுக்கான கோடை முகாம் கடந்த 8ம் தேதி துவங்கி 23ம் தேதி வரை நடந்தது. முகாமில் செயற்கை நுண்ணறிவு பற்றிய விழிப்புணர்வு, யோகா, சுகாதாரம், நிதி மற்றும் வங்கி செயல்பாடுகள், மண் பொம்மைகள் செய்வது, பொது பேச்சு மற்றும் ஆளுமை வளர்ச்சி, தபால் நிலைய செயல்பாடுகள், இளம் தொழிலதிபர்கள், உலர் தாவரங்கள் வளர்ப்பு, கட்டுரைகள் வரைதல், வினாடி வினா, சுற்றுலா, மாறுவேட போட்டி போன்ற பயிற்சிகள் அளிக்கப்பட்டது. இதில், புதுச்சேரியில் உள்ள பள்ளிகளை சேர்ந்த 50க்கும் மேற்பட்ட மாணவ, மாணவியர் கலந்து கொண்டனர். முகாம் நிறைவாக, தனியார் நிறுவன இயக்குனர் சங்கரன் பங்கேற்று, அனைத்து மாணவ, மாணவிய ருக்கும் சான்றிதழ்கள் வழங்கினார். இந்த நுாலகத்தில் புகழ் பெற்ற எழுத்தாளர்கள் எழுதிய புத்தகங்கள், போட்டித் தேர்வு மற்றும் சிறுவர்களுக்கான புத்தகங்கள் என, 18 ஆயிரம் நுால்கள் உள்ளன. மேலும், விவரங்களுக்கு 0413 2292299 மற்றும் 93440 92622 எண்களில் தொடர்பு கொள்ளலாம்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை