ஊஞ்சல் உற்சவம்
நெட்டப்பாக்கம்; செம்படப்பேட்டை அங்காள்ளம்மன் கோவிலில் ஊஞ்சல் உற்சவம் நடந்தது.நெட்டப்பாக்கம் அடுத்த செம்படப்பேட்டை கிராமத்தில் பிரசித்திபெற்ற அங்காளம்மன் கோவில் உள்ளது. இக்கோவிலில் அமாவாசை தோறும் ஊஞ்சல் உற்சவம் நடப்பது வழக்கம். அதன்படி அமாவாசையான நேற்று முன்தினம் இரவு 9:40 மணிக்கு ஊஞ்சல் உற்சவம் நடந்தது. இதையொட்டி அன்று காலை 10.00 மணிக்கு அம்மனுக்கு சிறப்பு அபிேஷக ஆராதனை நடந்தது. இரவு 9:40 மணிக்கு கேரளா இசையுடன் ஊஞ்சல் உற்சவம், தொடர்ந்து அன்னதானம் வழங்கப்பட்டது. திரளான பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்தனர்.