உள்ளூர் செய்திகள்

ஆசிரியர் தின விழா

புதுச்சேரி : நாவலர் நெடுஞ்செழியன் அரசு மேல்நிலைப்பள்ளியில் ஆசிரியர் தின விழா கொண்டாடப்பட்டது. பள்ளியில் நடந்த நிகழ்ச்சியில், பள்ளி முதல்வர் அர்ப்பிதா தாஸ் தலைமை தாங்கினார். ஆசிரியர் தமிழரசி நிகழ்ச்சியை தொகுத்து வழங்கினார். சிறப்பு விருந்தினராக, அரிமா சங்கத்தின் முன்னாள் தலைவர் சிவராமச்சந்திரன் பங்கேற்றார். தொடர்ந்து, ஆசிரியர்களின் அறப்பணி குறித்து சிறப்புரை நிகழ்த்தி னார். மாணவர்களின் கலை நிகழ்ச்சிகள் நடந்தது. பேராசிரியர் ரத்தினவேலு நன்றி கூறினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை