உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / புதுச்சேரி / செங்கல் சூளை பள்ளங்களால் ஆபத்து

செங்கல் சூளை பள்ளங்களால் ஆபத்து

செங்கல் சூளைக்காக அரசின் அனுமதியை விட அதிக அளவில் பள்ளம் எடுக்கப்படுவதால், கைக்கிலப்பட்டு கிராமத்திற்கு வெள்ள அபாயம் ஏற்பட்டுள்ளது.புதுச்சேரி, கைக்கிலப்பட்டு சங்கராபரணி ஆற்றின் அருகேயுள்ள தமிழகப் பகுதியான கொடுக்கூர் விவசாய நிலங்களில் செங்கல் சூளைத் தொழில் தற்போது அதிக அளவில் நடந்து வருகிறது.இந்த சூளைகளில் செங்கல் தயாரிப்புக்காக விவசாய நிலத்தில் 4 அடி ஆழம் வரை மட்டுமே பள்ளம் தோண்டி மண் எடுக்க வருவாய் துறை அனுமதி அளித்துள்ளது. ஆனால், அனுமதியை மீறி சங்கராபரணி ஆற்றின் அருகே நிலங்களில் 10 அடி முதல் 20 அடி வரை பொக்லைன் இயந்திரம் மூலம் பள்ளம் அமைத்து மண்ணை எடுத்து சூளைக்கு பயன்படுத்தி வருகின்றனர். அதனால், அப்பகுதியில் விவசாயம் பாதிக்கப்படும் நிலை ஏற்பட்டுள்ளது. இதுகுறித்து சம்மந்தப்பட்ட வருவாய் அதிகாரிகளிடம் விவசாயிகள் புகார் தெரிவித்தும் இதுவரையில் எந்தவித நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. இந்நிலையில், ஆற்றங்கரையை ஓட்டிய விவசாய நிலங்களில் அதிக ஆழத்திற்கு பள்ளங்கள் எடுக்கப்படுவதால், மழைக்காலங்களில் சங்கராபரணி ஆற்றில் வெள்ளப் பெருக்கு ஏற்பட்டு, தண்ணீர் புதுச்சேரி பகுதியான கைக்கிலப்பட்டு கிராமத்திற்குள் நுழையும் அபாயம் ஏற்பட்டுள்ளது. எனவே, வருவாய்துறையினர் உடனடியாக செங்கல் சூளை பகுதிகளில் ஆய்வு மேற்கொண்டு, அரசு அனுமதியை மீறி அதிக அளவில் பள்ளம் எடுத்த சூளை உரிமையாளர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்.இதற்கிடையே, சமீபத்திய புயல் மற்றும் கனமழையின்போது வீடூர் அணை திறப்பால், சங்கராபரணி ஆற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டு, கைக்கிலப்பட்டு குடியிருப்புகள் வரை தண்ணீர் சென்றது குறிப்பிடத்தக்கது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

புதிய வீடியோ