உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / புதுச்சேரி / தீமிதி உற்சவம் கொடி ஏற்றம்

தீமிதி உற்சவம் கொடி ஏற்றம்

திருக்கனுார்: கூனிச்சம்பட்டு திரவுபதியம்மன் கோவிலில், தீமிதி உற்சவம் நேற்று முன்தினம் கொடியேற்றத்துடன் துவங்கியது. திருக்கனுார் அடுத்த கூனிச்சம்பட்டு கிராமத்தில் திரவுபதியம்மன் கோவில் அமைந்துள்ளது. இக்கோவிலில் தீமிதி உற்சவம் நேற்று முன்தினம் (30ம் தேதி) கொடியேற்றத்துடன் துவங்கியது.இதையொட்டி, தினமும் அம்மனுக்கு சிறப்பு அபிஷேகம் மற்றும் இரவு சிறப்பு அலங்காரத்தில் சுவாமி வீதியுலா நடக்கிறது.இதில், வரும் 13ம் தேதி திரவுபதியம்மன் சுவாமி திருக்கல்யாண உற்சவமும், 15ம் தேதி காலை தேர் வீதியுலா நடக்கிறது. முக்கிய நிகழ்வாக வரும் 16ம் தேதி காலை 10:00 மணிக்கு ஊரணி பொங்கல் நிகழ்ச்சியும், மாலை 6:00 மணிக்கு தீமிதி உற்சவம் நடக்கிறது. ஏற்பாடுகளை கோவில் அறங்காவலர் குழுவினர் மற்றும் பொதுமக்கள் செய்து வருகின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !