ஆசிரியர்களுக்கு பயிற்சி முகாம்
புதுச்சேரி: புதுச்சேரி கல்வித்துறை பயிற்சி மையம் சார்பில், சி.பி.எஸ்.இ., பிளஸ் 2 பொதுத்தேர்வினை எதிர்கொள்ளும் அரசு பள்ளி மாணவர்களுக்கு வழிமுறைகள் மற்றும் நுணுக்கங்கள் குறித்து ஆசிரியர்களுக்கு இரண்டு நாள் பயிற்சி முகாம் நடந்தது.பயிற்சி மையம் சிறப்பு பணி அலுவலர் சுகுணா சுகிர்த பாய் கலந்து கொண்டு சிறப்புரையாற்றினார். முகாமில் சி.பி.எஸ்.இ., பிளஸ் 2 பொதுத்தேர்வை முதல் முறையாக அரசு பள்ளி மாணவர்கள் எதிர்கொள்ள இருக்கின்றனர். மாணவர்களை தேர்விற்கு தாயர் படுத்தி வரும் விரிவுரையாளர்களுகக்கு அனுபவம் மிக்க பயிற்சியாளர்கள் கொண்டு பயிற்சி அளிக்கப்பட்டது.இப்பயிற்சியின் மூலம் மாணவர்கள் தேர்ச்சி விழுக்காடு அதிகரிக்கவும், சுலபமான பாடப்பகுதிகளை நினைவில் கொள்ளும் வழிமுறைகள் ஆசிரியர்களுக்கு விளக்கப்பட்டது.