உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / புதுச்சேரி /  கத்தியை காட்டி மிரட்டிய இருவர் கைது

 கத்தியை காட்டி மிரட்டிய இருவர் கைது

புதுச்சேரி: கத்தியை காட்டி பொதுமக்களை மிரட்டிய, இரு வாலிபர்களை போலீசார் கைது செய்தனர். ரெட்டியார்பாளையம் போலீசார் நேற்று காலை ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தனர். அப்போது ஜே.ஜே., நகரில் வாலிபர் ஒருவர் கத்தியை காட்டி பொதுமக்களை மிரட்டுவதாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது. போலீசார் மிரட்டல் வாலிபர் பிடித்து விசாரித்ததில், மூலக்குளம், ஜே.ஜே. நகரை சேர்ந்த சின்னப்பன் மகன் கில்பர்ட், 26; என்பது தெரியவந்தது. அவரை கைது செய்து, அவரிடம் இருந்து கத்தியை பறிமுதல் செய்தனர். தொடர்ந்து, அந்த பகுதியில் கத்தியை காட்டி பொதுமக்களை மிரட்டிய ஆரோக்கியதாஸ் மகன் ஆல்பர்ட், 34; என்பவரை போலீசார் கைது செய்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்