இந்திய கம்யூ., நிர்வாகிகள் 2 பேர் கட்சியிலிருந்து நீக்கம்
புதுச்சேரி: இந்திய கம்யூ., நிர்வாகிகள் 2 பேர் கட்சியிலிருந்து நீக்கம் செய்யப்பட்டுள்ளனர். இதுகுறித்து இந்திய கம்யூ., மாநில செயலாளர் சலீம் விடுத்துள்ள அறிக்கை; கட்சி கட்டுப்பாட்டை மீறி செயல்பட்ட மாநிலக்குழு உறுப்பினரும், தட்டாஞ்சாவடி தொகுதி செயலாளருமான முருகன், பெரிய மார்க்கெட் கிளை உறுப்பினர் சுப்ரமணியன் ஆகியோர் கட்சியிலிருந்து நீக்கப்பட்டுள்ளனர். இவர்கள் என்.ஆர்.காங்., வேட்பாளர் மற்றும் சுயேச்சை வேட்பாளருக்கு ஆதரவாக செயல்பட்டதால் கட்சியிலிருந்து நீக்கப்படுகின்றனர்.