உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / புதுச்சேரி / அடையாளம் தெரியாத முதியவர் சாவு

அடையாளம் தெரியாத முதியவர் சாவு

பாகூர் : கன்னியக்கோவிலில் இறந்து கிடந்த அடையாளம் தெரியாத நபர் குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.புதுச்சேரி - கடலுார் சாலை கன்னியக்கோவில் அரசு ஆரம்ப பள்ளி அருகே உள்ள தென்னந்தோப்பில் கடந்த 11ம் தேதி 60 வயது மதிக்கத்தக்க அடையாளம் தெரியாத முதியவர் ஒருவர் இறந்து கிடந்தார். தகவலறிந்த கிருமாம்பாக்கம் போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று அவரது உடலை மீட்டு, பிரேத பரிசோதனைக்கு கதிர்காமம் அரசு மருத்துவமனை அனுப்பினர். போலீசார் வழக்கு பதிந்து இறந்தவர் யார் என, விசாரணை நடத்தி வருகின்றனர். இவறை பற்றி தகவல் தெரிந்தால், 0413 - 2611143 என்ற தொலைபேசி எண்ணில் தொடர்பு கொள்ளவும்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

முக்கிய வீடியோ