உள்ளூர் செய்திகள்

உறியடி உற்சவம்

பாகூர்: பாகூர் அடுத்த சேலியமேடு கோகுல கிருஷ்ணன் சுவாமி கோவிலில், கோகுலாஷ்டமியையொட்டி நேற்று உறியடி உற்சவம் நடந்தது. காலை 9:00 மணிக்கு கண்ணபிரானுக்கு பால், தயிர், தேன், சந்தனம், உள்ளிட்டவற்றால் விசேஷ திருமஞ்சனம் நடந்தது. மாலை 6:00 மணிக்கு சிறப்பு பஜனை, தொடர்ந்து, உறியடி உற்சவம் நடந்தது. திரளான சிறுவர்கள் உறியடித்து மகிழ்ந்தனர். கிருஷ்ணர் கையில் வெண்ணெய் பானையுடன் உறியடி அலங்காரத்தில் வீதியுலா சென்று அருள்பாலித்தார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை