யோகாஞ்சலி நாட்டியாலத்தில் விஜயதசமி சேர்க்கை துவக்கம்
புதுச்சேரி: யோகாஞ்சலி நாட்டியாலயத்தில் விஜய தசமியை முன்னிட்டு யோகா, பரதநாட்டியம், கர்நாடக சங்கீதம் வகுப்புகளுக்கான சேர்க்கை துவங்கியுள்ளது.புதுச்சேரி அய்யனார் நகர், 2வது குறுக்கு தெருவில் யோகாஞ்சலி நாட்டியாலயம் இயங்கி வருகிறது. இங்கு, பாரம்பரிய கலையான யோகா, பரதநாட்டியம், கர்நாடக சங்கீதத்திற்கென 55 ஆண்டுகளாக முதன்மை கல்வி நிறுவனமாக செயல்பட்டு வருகிறது.விஜயதசமியை முன்னிட்டு யோகா, பரதநாட்டியம்,கர்நாடகசங்கீதம் வகுப்புகளுக்கான சேர்க்கை துவங்கி நடந்து வருகிறது. மேலும், விபரங்களுக்கு 0413- 2241561, 94430 51616 என்ற எண்ணில் தொடர்பு கொள்ளவும்.