கால்நடை விவசாயிகளுக்கான நலத்திட்ட விண்ணப்பம்
புதுச்சேரி: கால்நடை விவசாயிகளுக்கு நலத்திட்டங்களுக்கான விண்ணப்பம் வெளியிடப்பட்டுள்ளது. அரசு செய்திக்குறிப்பு; அரசின் கால்நடை பராமரிப்பு மற்றும் கால்நடை நலத்துறை இந்த ஆண்டு கால்நடை விவசாயிகளுக்கான நலத்திட்டங்களை அமல்படுத்த உள்ளது. இதில், கறவை பசு கொட்டகைக்கு தேவையான ரப்பர் தரை விரிப்பு, தீவனப் பயிர்கள் வெட்டும் இயந்திரம், மண்ணில்லா பசுந்தீவனம் உற்பத்தி தொகுப்பு, குச்சி தீவனம் தயாரிக்கும் இயந்திரம் போன்ற திட்டங்கள் அமல்படுத்தப்பட உள்ளன. விவசாயிகள் இதற்கான விண்ணப்பங்களை வரும் 18ம் தேதி வரை கால்நடை துறை இணையதளத்தில் www.https://ahd.py.gov.inபதிவிறக்கம் செய்து, பூர்த்தி செய்து, தங்கள் பகுதி கால்நடை மருந்தக உதவி மருத்துவரிடம் சமர்ப்பிக்க வேண்டும். இறுதி நாள் 19ம் தேதி.